இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள் மூவர், தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.
இந்த நிகழ்வு நேற்று(24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

கியூபா குடியரசின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பற்றீசியா லாசரா போகோ குவேரா, கட்டார் நாட்டின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஹமத் முகம்மது அப்துல்லா அல் சனத் அல் தோசாரி, ஸ்லோவேனியா குடியரசின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள
தோமாஷ் மேன்சின் ஆகியோரே
தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.


வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!