இலங்கை – இங்கிலாந்து இரண்டாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாசவில் 2.30 க்கு!

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று(25) இடம்பெறவுள்ளது.

இந்தப்போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதலாவது போட்டியில், இலங்கை அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

குசல் மெண்டிஸ் 93 ஓட்டங்களையும்,
துனித் வெல்லலாகே சிறப்பான ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தொடரில் இலங்கை 1–0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 2 ஆவது போட்டியில்
இலங்கை வெற்றிபெற்றால், தொடரை கைப்பற்றும்,
இங்கிலாந்து வெற்றிபெற்றால் தொடர் சமநிலைக்கு வரும்.

Exit mobile version