காலாவதியான அனுமதிப் பத்திரத்தை பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்.கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இன்று (09) காலையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஹன்ரர் வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.

இதன்போது காலாவதியான அனுமதிப்பத்திரத்தை பாவித்து மரக்கடத்தலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

இதன்போது தேக்கு, வேம்பு போன்ற மரங்கள் கடத்திவரப்பட்டுள்ளன.
அதனையடுத்து வாகனத்தையும், மரக்குற்றிகளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரையும்,மரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஐர்ப்படுத்தவுள்ளனர்.


யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் பலி!
பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!