கல்வி அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்த மனித உரிமைகள் ஆணைக்குழு!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரை யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு இன்று(30) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளது.

கட்டாயமாக இடம் மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்து ஆசிரியர்கள், யாழ் மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டு விசாரணையை செய்வதற்காக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோரை இன்று விசாரணைக்கு வருமாறு யாழ் மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

Exit mobile version