கியூபா (Cuba) நாட்டிற்கு சுற்றுலா பயணம் செய்ய வேண்டாம் என சுவிட்சர்லாந்து அரசு தனது குடிமக்களுக்கு வழங்கிய ஆலோசனையை மேலும் கடுமையாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்து வெளிவிவகார துறை
இந்த அறிவிப்பை நேற்றைய தினம்(17) விடுவித்துள்ளது.
குறிப்பாக கரீபியன் தீவுக்கு தேவையற்ற சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கியூபா தற்போது கடுமையான அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
மின்சார விநியோகம் மிகவும் நிலைகுலைந்த நிலையில் இருப்பதாகவும், பல மணி நேரங்களிலிருந்து பல நாட்கள் வரை மின்தடை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து வெளிவிவகார துறை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!
தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!
டெங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் இன்று முதல் ஆரம்பம்!
பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!