கிளிநொச்சி – கரடிப்போக்கு ஏ9 வீதியில் அரச பேருந்தும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த சம்பவம் இன்று(28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்தும், கிளிநொச்சி யிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப. பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
விபத்தில் காயமடைந்த டிப்பர் சாரதியும்,அரச பேருந்து சாரதியும் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

அமெரிக்க ஐனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, பதவி விலக்க் கோரி போராட்டங்கள்!
இந்தியா அனுப்பிய 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கொலன்னாவைக்கு!
லெபனானில் இடம்பெற்ற தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் பலி!
டிஜிட்டல் அடையாள அட்டையில் முழுமையான மாற்றம்: முதற்கட்ட பணிகள் ஆரம்பம்!