சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் மரணம்!

வவுனியா – செக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(08) இரவு இடம்பெற்றுள்ளது.

கத்திக் குத்துக்கு இலக்கான பெண் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

செக்கடிப்புளவில் வசித்து வந்த வயது 56 என்ற பெண்ணே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் இருந்த சகோதரனால் இந்த கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சகோதரனை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version