சிம்பாவே மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்குடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிவுள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிம்பாவே மகளிர் அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது.


இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து மகளிர் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில், 3ஆவது ஒரு நாள் போட்டி நேற்று(11) இடம்பெற்றது.


இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து, 303 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 304 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி
27.1 ஓவர்களில் அனைத்து விக்கட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
அதனடிப்படையில் , நியூசிலாந்து மகளிர் அணி, 200 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!
தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!
டெங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் இன்று முதல் ஆரம்பம்!
பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!