அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி,இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுரேஷ் சாலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எப்போதும் உதவத் தயார்: ஈரான் அறிவிப்பு!
அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!
பேக்கரி உற்பத்திகளின் விலைகள் நள்ளிரவுடன் 10 ரூபாவால் அதிகரிப்பு!
தனியார் போக்குவரத்து சங்கங்கள் சில சேவைப் புறக்கணிப்பில்!