திருகோணமலை விபத்தில் குடும்பஸ்தர் பலி!

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சீனக்குடா பகுதியில் ரயில் கடவைக்கு அண்மையில் நேற்றிரவு (17) விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த என்ற 40 வயதுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமொன்றும் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version