நாகர் கோவில் பகுதியில் 14 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் 14 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.

துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் பகுதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கிலோகிராம் எடை உள்ள ஒன்பது கேரளா கஞ்சா பொதிகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்னர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் மருதங்கேணி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version