நெடுந்தீவுக்கான அரச படகுச் சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளன.
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில், குமுதினி திருத்தவேலை காரணமாக சேவையில் ஈடுபடவில்லை.


வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையேயான அரச படகு சேவைகள், முற்றாக செயலிழந்துள்ளன.


இந்தநிலையில் தனியார் படகு சேவையான, கரிகணன் மட்டுமே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.

குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்!
இலங்கைக்கு மேலதிக எரிபொருள் வழங்க முன்வந்தது சீனா!
தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த நிபுணர் குழு!
எரிவாயுக் கப்பல் ஒன்று நாட்டுக்கு வருகை!