இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

நெடுந்தீவுக்கான அரச படகு சேவைகள் மாற்றாக செயலிழப்பு!

நெடுந்தீவுக்கான அரச படகுச் சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளன.

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில், குமுதினி திருத்தவேலை காரணமாக சேவையில் ஈடுபடவில்லை.

வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையேயான அரச படகு சேவைகள், முற்றாக செயலிழந்துள்ளன.

இந்தநிலையில் தனியார் படகு சேவையான, கரிகணன் மட்டுமே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button