மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்!

இலங்கையின் மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இந்த நியமனம் இன்று(13) வழங்கப்பட்டது.

சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக எஸ் சதீஸ்தரன் கடமையாற்றிவந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் அவர்,
யாழ்ப்பாண நீதிமன்றத்தில், நீதவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும் நீண்டகாலம் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version