யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு!

யாழ்.சாவகச்சேரி பிரதேச சபையின் 10 ஆவது அமர்வு பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று(26) இடம்பெற்றது.

தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில், பிரதேச சபையால் கடந்த காலத்தில் ஆற்றப்பட்ட சேவைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது.

மேலும், தனியார் வகுப்புகளை இரவு நேரங்களில் நடத்துவதை தடைசெய்தல், நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்தல், செயலிழந்து போயிலுள்ள கழிவகற்றல் செயன்முறையை மீள இயங்கச் செய்தல் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

Exit mobile version