யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்ட இளம் அரசியல் தலைவர்கள்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தை இன்று(02) பார்வையிட்டனர்.

14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது வடக்கு மாகண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சுனைகள் தொடர்பாக கள விஜயங்கள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் வருகைதந்த குறித்த குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்

அந்த வகையில், யாழ்.பொது நூலகத்தை இன்று(02) பார்வையிட்டனர்

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version