விண்ணில் சாகசம் காட்டிய மங்கையரின் பட்டம்!

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவில் பெண்கள் மூவர் இணைந்து பட்டம் ஏற்றியுள்ளனர்.

இந்தப் பட்டப் போட்டித் திருவிழா, வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்று முன்தினம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது 42 பட்டங்கள் ஏற்றப்பட்டன.

அதில் இந்தப் பெண்கள் ஏற்றிய “காற்றில் இசைக்கும் றம்செற்” பட்டம் முதல் மூன்று இடங்களைப் பெறாவிட்டாலும் அனைவரது பாராட்டுக்களைப் பெற்றதோடு, பாராட்டுப் பரிசையும் பெற்றது.

Exit mobile version