தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவேந்தல்!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ் யாழ்ப்பாணம் வேலணை – வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்று (14) இடம்பெற்றது.

நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

இதன்போது ஏற்பாட்டுக் குழுவினர்கள், ஊர்காவற்றுறை பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version