அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று(23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இனவாதம் மற்றும் பிரதேச,சாதிய வாதங்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version