ஆட்பதிவு திணைக்கள சேவைகள் இன்று இடைநிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது.

மேலும், ஆளடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இடம்பெறாதென ஆட்பதிவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version