வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!

நுவரெலியா – வலப்பனை – ஹரஸ்பெத்த – கல்தெகபத்தன வனப் பகுதியில் இன்று (26) பாரிய காட்டுத் தீ பரவிவருகிறது.

காட்டுத் தீயால் இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் நிலவும் அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக தீ வேகமாகப் பரவி வருகிறது.

தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் வனவள திணைக்களத்தினர், அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version