ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

போர் மேலும் தீவிரம் அடைந்தால், மத்திய கிழக்கிலுள்ள பென்டகனின் பேட்ரியாட் ஏவுகணை எதிர்ப்புத் தடுப்பான்கள் மற்றும் பிற வான் பாதுகாப்பு சக்திகளின் இருப்பை அது குறைத்து விடும் என்பதாலேயே இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை ட்ரம்ப், மேற்கொண்டுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிரேஷ்ட ஆலோசகர்கள் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவை டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version