இந்தோனேஷியக் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் பலி: மேலும் ஒருவர் காயம்!

கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கம் இன்று (15) அதிகாலை ஏற்பட்டுள்ளதுடன் 7.7 ரிக்டர் அளவில் அது பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தையடுத்து இந்தோனேசியாவின் பல கடலோரப் பகுதிகளில் 1 மீற்றருக்கும் குறைவான உயரம் கொண்ட சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version