உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்:மூன்று பேர் பலி!

உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள சுஹுயேவ் நகரின் மீது ரஷ்யா நடாத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் அவசரக்கால சேவைப் பிரிவினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் ஆண்கள் இருவரும், பெண்ணெருவருமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலில் பொதுப் பயன்பாட்டுக் கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதோடு,நகரின் பல இடங்களிலும் தீ பரவியுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version