உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தீ விபத்து!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இராணுவம் நடாத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உக்ரேன் மீதான இந்தத் தாக்குதல் ரஷ்யா இன்று (16) காலையில் நடாத்தியுள்ளது.

இந்த தாக்குதலில்
ஒருவர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு புறநகர்ப் பகுதியிலுள்ள குடியிருப்பு அல்லாத இடத்தில், ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பல கார்கள் தீப்பிடித்து எரிந்தஉள்ளதோடு, நகர மையப் பகுதிக்கு சற்று தெற்கேயுள்ள மற்றொரு இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version