அனர்த்தம் காரணமாக, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கான பரீட்சைகள், இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களால் நாட்டின் பல பாகங்களிலும் பரீட்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இக்காலப்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளுக்குச் சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்காகவே இந்த புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வரணி மத்திய கல்லூரி மைதான அரங்கைத் திறந்து வைத்த இராணுவத் தளபதி!
செம்மணியில் இன்றும் 7 என்புக் கூடுகள் அடையாளம்!
துப்பாக்கி வெடித்ததில் மன்னாரில் இராணுவச் சிப்பாய் பலி!
உருகுவே – கேப் வெர்டே இடையேயான போட்டி சமநிலையில் நிறைவு!