யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டுவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் துணைவேந்தர் ஆக நியமனம் பெறுகிறார்.
அண்மையில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளை பெற்று முதன்மை நிலையை பேராசிரியர் வேல்நம்பி பெற்றிருந்தார்.
அத்தோடு துணைவேந்தர் தேர்தலில் கடந்த மூன்று தடவைகள் முதல் மூன்று இடங்களுக்குள் அவர் தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இடம்பெற்ற திறந்த நீதிமன்ற அமர்வு: எட்டு என்புக் கூடுகள் நேற்றும் மீட்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!
இந்திய மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் விபத்து!