யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாயில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாயிலான ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ இன்றைய தினம் (06) திறந்து வைக்கப்பட்டது.
சட்டநாதர் சிவன் ஆலயத்திலிருந்து இன்று காலை 10.30 மணியளவில்
சமய அனுஷ்டானங்களோடு,நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணியளவில் நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தோடு காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாக செல்ல, ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண கந்தபுராண மரபையும், கலாசாரப் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பும் வகையில் இவ்வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளது.





செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இடம்பெற்ற திறந்த நீதிமன்ற அமர்வு: எட்டு என்புக் கூடுகள் நேற்றும் மீட்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!
இந்திய மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் விபத்து!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!