தென்மராட்சியில் கையெழுத்துப் போராட்டம்!

வடக்கு கிழக்கு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில், கையெழுத்து பெறும் போராட்டம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக் கோரியும், இந்த கையெழுத்துப் பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய தென்மராட்சிப் பிரதேசத்தின் கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் இந்த கையெடுத்துக்கள் பெறப்பட்டன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version