இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் வைத்தே குறித்த நபர் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதானவரிடமிருந்து 12 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான நபர் கம்பளையைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் முதலாவது தகுதிச் சுற்று இன்று ஆரம்பம்!
பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 17 பேர் பலி!
நாட்டில் மின்வெட்டை தவிர்ப்பதற்கான உபாயங்களை ஆராய்கிறது ஈரான்!
வித்தியா கொலை வழக்கு மரண தண்டனைக் கைதி உயிர் மாய்ப்பு!