ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைத் தொடர்ந்து, நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஈரான் ஆராய்ந்து வருகிறது.
சில மின் உற்பத்தி நிலையங்களால், கைத்தொழில் துறைக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க முடியாமல் போயுள்ளதோடு, பொது மின் விநியோகக் கட்டமைப்பிலிருந்து அவர்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக
அந்நாட்டு துணை ஜனாதிபதி மொஹமட் ரெசா ஆரிஃப் (Mohammad Reza Aref) தெரிவித்துள்ளார்.
எரிசக்தியை உகந்த முறையிலும் தகுந்த வகையிலும் பயன்படுத்துவதே எங்களது பொதுவான கலந்துரையாடலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிசக்தி உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் இருந்து எரிபொருள் நுகர்வைக் குறைக்குமாறு நாட்டு மக்களிடம் அந்நாட்டின் எண்ணெய் வள அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் கார் விபத்தில் யாழ் இளைஞன் பலி: இருவர் படுகாயம்!
வெளிநாடுகளிலுள்ள குற்றக் குழுவைச் சேர்ந்த 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு!
இந்தியன் பிரீமியர் லீக் கின் 68 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
தனது வான் பரப்பை மூடிய குவைத்!