ஈழத்து சிறப்புமிக்க கிளிநொச்சி – கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா எதிர்வரும் ஓராந்திகதி இடம்பெறவுள்ளது.



அதற்கமைய பொங்கலுக்கான பிரம்பு வழங்கும் நிகழ்வு நேற்று(25) இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பண்டப் பொருட்களை எடுத்து வருவதற்காக, வண்டில்கள் மீசாலை புத்தூர் சந்தியில் அமைந்துள்ள பண்டமாவடி பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்துள்ளன.



ஏழு நாட்கள் ஆலயத்தில் தங்கியிருந்தது பண்டவண்டில்கள், நாகதம்பிரான் ஆலய பொங்களுக்கு தேவையான பொருட்கள் சேகரிப்பதில் ஈடுபடும்.
அதன்பின்னர் எடுக்கப்பட்ட பண்டங்களுடன் வண்டில்கள் எதிர்வரும் ஓராந்திகதி, கரைச்சி நாத்தம்பிரான் ஆலயத்தைச் மாலை சென்றடையும்.
அதனைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் பகல் இரவாக இடம்பெறவுள்ளது.



வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!