டெங்கு பரவலால் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடல்!

டெங்கு பரவலால் மொரட்டுவை பல்கலைக்கழகம் மூடல்!

டெங்கு பரவல் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக்குப் அமைய இந்த தீர்மானம் நேற்று(06) எடுக்கப்பட்டதாக, கல்வி மற்றும் உயர்கல்வித் துறை பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் பல மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version