கீரிமலையில் பிதிர்கடன் செலுத்திய மக்கள்!

ஆடி அமாவாசை தினமான இன்று(12) இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செலுத்தும் நிகழ்வு யாழ்.கீரிமலை தீர்த்தக்கரையில் இடம்பெற்றது.

பல்லாயிரக் கணக்காணவர்கள் ஒன்றுகூடி, இறந்த தமது பெற்றோர் மற்றும் முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் மற்றும் கண்டகி தீர்த்தக் கரைக் கடலில் நீராடி தங்கள் கடன்களை நிறைவேற்றினர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version