குற்றத்தடுப்பு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட யாழ்.பல்கலை மாணவர்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் குற்றத் தடுப்பு பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த விசாரணை யாழ். குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று(19) இடம்பெற்றது.

சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடிக்கு பதிலாக கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளவே குறித்த மாணவர்கள் மூவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விசாரணையின் போது மாணவர்கள் சார்பாக சட்டத்தரணி வி.மணிவண்ணன் உடன் சென்றிருந்தார்.

Exit mobile version