முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து நடைமுறைக்கு முரணாக சுகாதார பொருட்களை கொள்வனவு செய்ததன் மூலம், அவர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்குவெல, அரசுக்கு தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 7.5 கோடி ரூபாவைச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா, முன்னாள் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரி பேராசிரியர் எஸ்.டி. ஜெயரத்தினே,
டாக்டர் விஜித் குணசேகர, மற்றும் டாக்டர் துசிதா சுதர்சன ஆகியோர் தலா 5 கோடி ரூபா செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!