யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொதுச்சந்தையின் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதற்கான நிகழ்வு
சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் இன்று(29) காலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இயங்கு நிலையற்றிருந்த கட்டடம் ஒன்றை சாவகச்சேரி பிரதேச சபை, மரக்கறி வியாபாரத்திற்கு ஏற்ற வகையில் புனரமைப்புச் செய்து
மரக்கறி வியாபார தொகுதியாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!
மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு விடுப்பு!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த இருவர் இலங்கைக்கு நாடு கடத்தல்!
யாழில் பொலிஸ் நிலையமும், தங்கிடங்களும் திறந்து வைப்பு!