கொழும்பு – பதுளை வீதி களுபஹன பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் சாரதி பலி: ஐவர் காயம்!

கொழும்பு பதுளை வீதியில் களுபஹன பாடசாலைக்கு அருகாமையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆலடித்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவ பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சாரதியின் சடலம் ஆலடித்தன்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Exit mobile version