ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி, அந்தப் பதவியிலிருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் நேரடி அறிவுறுத்தல்களை மீறி சோஹாரா புகாரி செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
குறிப்பாக, அவர் தனது வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வழங்கியமை கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கட்சி ஒழுக்க விதிகளை மீறியமைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் ஊடாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன் இறுதி முடிவாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சோஹாரா புகாரியின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதை அடுத்து, அவர் மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு!
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு!
T20 13 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி!
கால்நடைகளைத் திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் பண்ணையாளர்கள் போராட்டம்!