கொழும்பு வத்தளை – துவவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வத்தளை – துவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
தீயைக் கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சேத விபரங்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை!
பசில் ரஜபக்ஷவிற்கு மாத்தறை நீதிமன்றம் பிடியணை!
பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் சந்திப்பு!
பல பிரதேசங்களுக்கு மன்சரிவு எச்சரிக்கை!