மதவாச்சி, கடவத்தகம பிரதேச வீடொன்றில் தந்தையோடு சேர்ந்து மது அருந்திய மகன் அவரை அடித்துக் கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மூத்த மகனுடன் சேர்ந்து மது அருந்தியதாகவும், அதன்போது ஏற்பட்ட தகராறின் காரணமாக மகன் மரக்கட்டையால் தந்தையை தாக்கி கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூத்த மகனே இந்த கொலையைச் செய்துள்ளார். 47 வயதான உயிரிழந்தவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர்.
அதனையடுத்து சந்தேகநபரான 42 வயதுடைய மகன், கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மனநலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!
தமிழ் மற்றும் முஸ்ஸிம் கட்சிகள் கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்து!
டெங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் இன்று முதல் ஆரம்பம்!
பலாலி மக்கள் காணிகளை விடுவிக்ககோரி 4 ஆவது ஞாயிறாகவும் போராட்டம்!