ஜனாதிபதி அனுர – பல்கலைக்கழக ஆசிரிய சம்மேளனம் சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும், இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(20) இடம் பெற்றது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பல்கலைக்கழகங்களின் பட்ட கற்கை நெறிகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல்கள் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version