தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் நேற்று (22) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version