யாழ்.வடமராட்சி தொண்டமனாறு வல்லை – துன்னாலை வீதியை புனரமைப்புக்காக அடிக்கல் நேற்று மாலை (26) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.



வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய 3.9 கிலோ மீற்றர் வீதி, 252 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.



வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் நிஷாந்தன் ஜனனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
இந்த நிகழ்வில்,
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரான்ஸ் நகராட்சி மன்ற துணை மேயராக ஈழத்தமிழர் ஆனந்தராசா நியமனம்!
மட்டக்களப்பு ஆரையம்பதி பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம்!
தமிழ் தேசிய பேரவையைச் சந்தித்த ஜநா வதிவிடப் பிரதிநிதி!
ஆட்டக்காரியை பிராந்திய நெல்லினமாக’ பரிந்துரைக்க நடவடிக்கை!