நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை , நெடுந்தாரகை ஆகியவற்றின் சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 13 முதல் இந்த படகு சேவை நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என நெடுந்தீவு பிரதேச செயலாளர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.
நெடுந்தீவில் இருந்து பி.ப. 3.00 மணிக்கு புறப்படும் படகு மீண்டும் குறிகாட்டுவானிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.
ஞாயிற்றுகிழமைகளில் நெடுந்தீவில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் படகு மீண்டும் குறிகாட்டுவானில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும்.
குமுதினி படகு சேவையில் எந்த மாற்றங்களும் இல்லை என பிரதேச செயலர் குறிப்பிட்டார்.

புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!
மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு விடுப்பு!