பாலைதீவு சென்ற படகு கவிழ்ந்தது: படகில் இருந்தவர்கள் நீரில் முழ்கினர்!

யாழ்.குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவுக்கு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கியுள்ளார்.

தென் இலங்கையிலிருந்து வருகைதந்த 15 பேர் குறித்த படகில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநகரிலிருந்து படகு புறப்பட்டு சில நிமிடங்களிலேயே கவிழ்ந்துள்ளது.

அதனையடுத்து அருகிலுருந்த கடற்றொழிலாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது மூவரை மீட்டு கரைக்கு கொண்டுவந்த போதிலும், அதில் படகோட்டி உயிரிழந்துள்ளார்.

ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

Exit mobile version