பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் எரியுண்ட சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான கோரோன் நோக்கிப் பயணித்த ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற படகே தீ விபத்துக்குள்ளானது.

இதன்போது படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என 134 பேர் பயணித்துள்ளனர்.

அவர்களில் இதுவரை 43 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version