பேக்கரி உற்பத்திகளின் விலைகள் நள்ளிரவுடன் 10 ரூபாவால் அதிகரிப்பு!

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று(23) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 450 கிராம் பாண் இறாத்தலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

முன்னர் 130 ரூபாவாக இருந்த 450 கிராம் பாணின் விலை 140 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version