மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று(16) ஈடுபட்டிருந்தனர்.
தலங்கம பகுதியில் நேற்று முன்தினம்(14) சட்டத்தரணி ஒருவரும் அவரின் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
அந்தச் சம்பவத்தை கண்டித்தும், துப்பாக்கிதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கப்பல் இலங்கை நோக்கிப் பயணம்!
யாழில் கல்விச் சீர்திருத்த கலந்துரையாடல்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில்!