உள்ளகப் பயிற்சித் தகுதியைப் பூர்த்தி செய்துள்ள 453 மருத்துவப் பட்டதாரிகளை தரம் I மருத்துவ அதிகாரிகளாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 04ஆம் திகதியுடன் தங்களது உள்ளகப் பயிற்சி காலத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ள மருத்துவப் பட்டதாரிகள் இந்த நியமனங்களுக்காக விண்ணப்பிக்க முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி ஏப்ரல் 04, 2026 நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதை விண்ணப்பதாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இறுதித் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு அமைச்சு எவ்விதப் பொறுப்பையும் ஏற்காது எனவும், காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்!
மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக காணி அளவீடு: மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!
பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவ வர்த்தமானி அறிவித்தல்!
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்!